கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக சீனாவுடனான தனது எல்லையை மூடுவதாகவும், சீன நாட்டினருக்கு மின்னணு வீசா வழங்குவதை நிறுத்தப்போவதாகவும் ரஷ்யா இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக சீனாவுடனான எல்லையை ரஷ்யா மூடுகிறது. இதற்கான உத்தரவில் ரஷ்யப் பிரதமர் மிகைல் மிஷுஸ்ரின் (Mikhail Mishustin) கையெழுத்திடுள்ளார்.
எமது நாட்டு மக்களைப் பாதுகாக்க நாம் அனைத்தையும் செய்ய வேண்டும் என்று ரஷ்யப் பிரதமர் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் இன்று வியாழக்கிழமை சீனக் குடிமக்களுக்கு மின்னணு வீசாக்கள் வழங்குவதை நிறுத்திவிடும். இந்த வீசாவானது தூர கிழக்கு மற்றும் மேற்கு ரஷ்யாவின் சில பகுதிகளுக்குச் செல்லப் பயன்படுகிறது.
சீனாவிற்குப் பயணம் செய்வதைத் தவிர்ப்பதுடன் சீனாவில் உள்ள ரஷ்யர்கள், ரஷ்ய தூதரகத்துடன் தொடர்பு கொள்ளவும் என்று வெளியுறவு அமைச்சகம் தமது பிரஜைகளுக்கு அறிவுறுத்தியது.
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொடர்பாக உறுதிப்படுத்தப்பட்டவர்கள் எவரும் இல்லை. எனினும் ரஷ்ய அரசாங்கம் அதன் பரவலைத் தடுக்க ஒரு பணிக்குழுவை அமைத்துள்ளது.