72 ஆவது சுதந்திர தின வைபவத்துக்காக 250 விசேட பிரமுகர்களும், சுமார் ஆயிரம் பொது மக்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.
கொழும்பில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அமைச்சர் மஹிந்த சமரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
முப்படை பொலிஸார், மற்றும் தேசிய மாணவர் படையணி அடங்கலாக 8 ஆயிரத்து 260 பேரைக் கொண்ட மரியாதை ஊர்வலமும் நடைபெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் அடங்கலாக சுமார் 2 ஆயிரத்து 500 பேர் எதிர்வரும் 4ஆம் திகதி நடைபெறவுள்ள 72 ஆவது சுதந்திர தின வைபவத்தில் கலந்து கொள்வார்கள்.
பெரும் எண்ணிக்கையிலானோரை இங்கு வரவழைத்து அவர்களுக்கான வசதிகளை செய்துகொடுப்பதில் சிரமங்கள் உண்டு. பொது மக்களுக்கும் பங்கு கொள்வதற்கு வசதிகள் மேற்கொள்ளப்படவுள்ளன’ எனக் குறிப்பிட்டுள்ளார்.