இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள சகல வேட்பாளர்களையும் ஒரே மேடையில் கொண்டுவந்து மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்துவருவதாக மார்ச் 12 இயக்கம் அறிவித்துள்ளது.
சகல வேட்பாளர்களையும் ஒரே மேடையில் ஒன்று கூட்டுவதற்கான சகல நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ளன. ஒரே மேடையில் சகல வேட்பாளர்களையும் கொண்டு வந்து பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுப்பது இதன் பிரதான நோக்கமாகும் என அவ்வியக்கத்தின் ஏற்பாட்டாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையினால் மக்களுக்கும் வேட்பாளர்களுக்கும் இடையிலான தொடர்பு பலமடையும். இதனால், இலங்கையின் அரசியல் போக்கில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என எதிர்பார்க்கின்றோம். அத்துடன், இதுபோன்ற நடவடிக்கையொன்று இதுவரையில் இலங்கை வரலாற்றில் இடம்பெறவில்லையெனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.