பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்ட சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக இன்று முதல் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகநபர்கள், வாகனங்கள் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பாக தெரியப்படுத்துவதற்காக இராணுவ தலைமையகத்தினால் விசேட தொலைபேசி இலக்கங்கள் அறவிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை
0112 – 43 42 51
0114 – 05 51 05
0114 – 05 51 06
0766 – 91 16 04
0112 – 43 33 35 ஆகிய இலக்கங்களுக்கு தொடர்புகொண்டு அறிவிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.