தாய்லாந்து நாட்டில் ‘பபுக்’ புயலுக்கு மூவர் பலியாகினர். 34 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
தாய்லாந்து வளைகுடாவில் உருவாகியுள்ள புயலுக்கு, ‘பபுக்’ என பெயரிடப்பட்டுள்ளது.
இப்புயல் அந்தமான் கடல் நோக்கி 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து சென்றதில் பல்வேறு இடங்களில் மின் கம்பங்கள் மற்றும் மரங்கள் சாய்ந்தன.பத்தானி மாநிலத்தில் மீனவர் ஒருவரும், தம்மாரட் மாநிலத்தில் இருவரும் உயிரிழந்தனர்.
மேலும், சம்ப்ஹார்ன், சோங்க்லா, பட்டாலங், பத்தானி, பெட்சாபுரி, பிரசாப் கிரிகான், சூரட்
தானி மற்றும் நாகோன் சி தம்மாரட் உள்ளிட்ட எட்டு மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தம்மாரட் பகுதியில்
உள்ள பல்வேறு கிராமங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 34 ஆயிரம் மக்களை மீட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.