அரச முகாமைத்துவ சேவையில் ஆட்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை இன்று ஆரம்பமாக இருப்பதாக அரச நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.
இச்சேவையில் 6 ஆயிரம் பேர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக அரச இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம் பி.எம்.ஜே. கமகே குறிப்பிட்டுள்ளார்.
போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு நேர்முகப் பரீட்சைக்கான கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நேர்முகப் பரீட்சை அரச நிருவாக அமைச்சில் எதிர்வரும் 13 ஆம் திகதி வரையில் நடைபெறும். நேர்முகப் பரீட்சை நிறைவடைந்தவுடன் இவர்கள் துரிதமாக சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.