உரிய மாற்றங்களை மேற்கொண்டு மக்கள் அதனைக் காணும் விதத்திலும் உணரும் படியாகவும் இந்த தேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லவுள்ளதாக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.
கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்தக் கருத்தை அவர் வெளியிட்டார்.
இந்த தேர்தல் மூலம் மக்கள் எமக்கு சிறந்த சமிக்ஞையொன்றை வழங்கியுள்ளனர். இதன்படி நாம் செய்ய வேண்டிய மாற்றங்கள் எவை என்பதை அடையாளம் கண்டுள்ளோம். நோய் உடம்பில் பரவ முன்னர் நோய்க்கான காரணத்தை நாம் இனம்கண்டுள்ளோம்.
இதன்படி மாற்றங்களை சரியாக முன்னெடுத்து எமது தேசிய அரசாங்கம் பயணிக்கும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.