எதிர்வரும் 4ஆம் திகதி இடம்பெறவுள்ள 70 ஆவது சுதந்திர தின நிகழ்வை முன்னிட்டு விசேட வாகன போக்குவரத்து அமுல்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தகவலை பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், கொழும்பு கோட்டை, காலி முகத்திடலை அண்மித்த வீதிகளில் இந்த திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
இந்த நிலையில் எதிர்வரும் 4ஆம் திகதி அதிகாலை 5 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை போக்குவரத்துத் திட்டம் அமுலில் இருக்கும் எனவும், காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணிவரை மட்டுப்படுத்தப்பட்டிருக்குமென பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.