திருடா திருடி, பொறி, யோகி, சீடன் படங்களை இயக்கிய சுப்பிரமணியம் சிவா, அடுத்து இயக்கும் படம் வெள்ளை யானை. மினி ஸ்டூடியோ சார்பில் எஸ்.வினோத்குமார் தயாரிக்கிறார். ஆ.ஜெகதீசன் ஒளிப்பதிவு செய்கிறார்.
தஞ்சாவூர்காரரான சுப்பிரமணியம் சிவா, தஞ்சை பகுதி விவசாயிகளின் கதையை படமாக இயக்குகிறார். இதில் சமுத்திரக்கனி விவசாயியாக நடிக்கிறார். இந்த படத்திற்கான போட்டோ ஷூட்டை ஸ்டூடியோவில் நடத்தாமல் தஞ்சாவூரின் வயல் வெளிகளில் நடத்தியிருக்கிறார் சுப்பிரமணியம் சிவா.
படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது. மற்ற நடிகர் நடிகைகள் பற்றிய விபரங்கள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. ஒரே ஷெட்யூலில் படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிட்டிருக்கிறார்கள். ஏப்ரல் மாதம் படத்தை வெளியிடுகிறார்கள்.