போக்குவரத்துக் குற்றங்களை புரியும் சாரதிகளுக்கு தண்டப்பண பத்திரம் வீட்டுக்கு அனுப்பும் முறை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் பரீட்சித்து பார்க்கவுள்ளதாக சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க சற்று முன்னர் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து விதி முறைகளை மீறும் சமயத்தில் எடுக்கப்படும் புகைப்படத்துடன் குறித்த தண்டப்பண பத்திரிக்கை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.