எரிபொருள் மற்றும் மின்சாரம் என்பவற்றுக்கான விலை நிர்ணயத்தை சுயமாக செயற்படச் செய்யக் கூடியதான சூத்திரப் பொறிமுறையொன்றை அறிமுகம் செய்ய இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த திட்டத்தினால் எதிர்காலத்தில் பிரதான அரச முதலீட்டு நிறுவனங்கள் பாரிய நஷ்டம் அடையும் நிலையிலிருந்து பாதுகாப்பதோடு, விலை மாற்றங்கள் பாரியளவில் இடம்பெறாமலும் தடுக்கின்றது.
மத்திய வங்கி ஆளுநரினால் வெளியிடப்பட்டுள்ள 2018 ஆம் ஆண்டுக்கான இலக்குகள் குறித்த அறிமுகத்தில் இந்த சூத்திரம் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.