எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ஆர். சம்பந்தன் மன்னார் ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகையை சந்தித்து சி பெற்றதோடு,நாட்டின் சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் உரையாடினார். மன்னாருக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர், மன்னாரில் காணாமல்போனோரின் உறவினர்களையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின்தலைவரும், எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் இன்று சனிக்கிழமை மாலை 4.45 மணியளவில் மன்னார் ஆயர் இல்லத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். இதன்போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்,மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசையும் கலந்து கொண்டிருந்தார்.
அதனைத்தொடர்ந்து வடமாகாணத்தில் காணமால் போனவர்களின் உறவினர்களுக்கும்,எதிர்க்கட்சி தலைவருக்கும் இடையில் மன்னார் ஆயர் இல்லத்தில் விசேட சந்திப்பு இடம் பெற்றது. இதன் போது மன்னார்,வவுனியா,கிளிநொச்சி,முல்லைத்தீவு மற்றும் யாழ் மாவட்டங்களில் காணாமல் போனவர்களின் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர். இதன் போதுகாணாமல் போனவர்களின் நிலைப்பாடு தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதாக அறிய முடிகின்றது.