முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடையே விசேட கலந்துரையாடல் ஒன்று நடந்துள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இந்தச் சந்திப்பு நடந்துள்ளது என்றும், சுமார் ஒரு மணி நேரம் இந்தச் சந்திப்பு நீடித்தது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
கலந்துரையாடலில் நாடாராளுமன்ற உறுப்பினர்களான தினேஷ் குணவர்தன, டளஸ் அழகப்பெரும உட்பட பலர் கலந்து கொண்டனர் என்றும் கூறப்படுகின்றது.
ஆயினும் அங்கு பேசப்பட்ட விடயங்கள் வெளியிடப்படவில்லை.