சட்டத்தை நடைமுறைப்படுத்தும் முறைமை உயரிய தன்மையில் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க.
பொலிஸ் துறையின் 151ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொழும்பில் நேற்று நடத்தப்பட்ட நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தெரிவித்தாவது
இலங்கையில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதானது, இங்கிலாந்து, ஜப்பான் மற்றும் ஜேர்மனி முதலான நாடுகளில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு சமாந்தரமாக இருக்க வேண்டும்.
முன்னொரு காலத்தில் அவ்வாறானதொரு நிலைமை இருந்தது. பின்னர் அது இல்லாமல் போனது.
போதைப்பொருள் மற்றும் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களை முழுமையாக தடுப்பது குறித்து கவனம் செலுத்த வேண்டும்.- என்றார்