தனியார் தொலைதொடர்பு சாதனத்திற்காக 50 நொடிகளே நடித்த நடிகை நயன்தாரா, அதற்காக இந்திய ரூபாய் 5 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
அறம், இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம் போன்ற திரைப்படங்களில் நயன்தாரா நடித்து வருகிறார்.
தற்போது நடித்துள்ள ஒரு விளம்பர திரைப்படத்துக்கு மட்டுமே இந்திய ரூபாய் 5 கோடி சம்பளம் வாங்கியுள்ளார். நடித்தது என்னமோ வெறும் 50 நொடிகள்தான்.
தொடர்ந்து திரைப்படத்தில் நடித்து வரும் நயன்தாரா சிறிதும் ஓய்வில்லாமல் படப்பிடிப்பில் பிஸியாக இருந்தாலும், இந்த விளம்பரப் படத்தில் நடிக்க தனது தெலுங்கு படப்பிடிப்பை தள்ளி வைத்துள்ளார்.
இரண்டு நாட்கள் தொடர்ந்து இந்த விளம்பரப் படத்திற்கான படப்பிடிப்பு நடத்தப்பட்டிருக்கிறது.
இந்த விளம்பரத்தை பல கோடி ரசிகர்கள் பார்த்திருக்கிறார்கள். இந்த விளம்பரத்தால் நயன்தாராவுக்கு அடுத்த திரைப்பட வாய்ப்புகள் குவியும் என்றே தோன்றுகிறது.
ஏற்கனவே இருமுகன் திரைப்படத்திற்கு நயன்தாரா 3 கோடி இந்திய ரூபாய் சம்பளம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.