இவ்வருடத்துக்குள் மாத்திரம் டெங்கு நோயினால் 310 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய்ப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு வார காலத்திற்குள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 635 ஆக அதிகரித்துள்ளதாகவும் அப்பிரிவு வெளியிட்டுள்ள புள்ளிவிபர அறிக்கையில் அறிவித்துள்ளது.
கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களே இந்நோயினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் எண்ணிக்கை 3 ஆயிரத்து 688 பேர் எனவும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது