இப்படங்களை தொடர்ந்து ‘இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கும் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கிடையில், ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடித்துக் கொடுப்பதாக ஏற்கெனவே போடப்பட்ட ஒப்பந்தத்தையும் நிறைவேற்ற சிவகார்த்திகேயன் சம்மதம் தெரிவித்துள்ளார்.
அந்த படத்துக்கான இயக்குனரை தயாரிப்பு நிறுவனம் தேர்வுசெய்யும் என சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. சிவாவும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துக்கு ஒரு படம் இயக்கித் தரும்படி ஒப்பந்தம் போட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதன்படி பார்க்கையில், சிவகார்த்திகேயன்-சிவா இணைப்பில் புதிய படம் ஒன்றை தொடங்க ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.