மார்க்கம் ஒன்ராறியோ- ஒன்ராறியோ அரசாங்கம் ரொறொன்ரோவின் வடக்கில் புதிய பல்கலைக்கழக வளாகத்தை திறப்பதற்காக மில்லியன் கணக்கான டொலர்களை வழங்குகின்றது.
மார்க்கத்தில் யோர்க் பல்கலைக்கழகத்தின் புதிய வளாகம் நிறுவுவதற்காக அரசாங்கம் 127மில்லியன் டொலர்களை வழங்குவதாக வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
4,000 மாணவர்கள்-பட்டதாரி மற்றும் இளங்கலை மாணவர்களிற்கு- புதிய வளாகத்தில் அனுமதி வழங்கப்படும் என யோர்க் தெரிவிக்கின்றது.எதிர் காலத்தில் 10,000 மாணவர்கள் வரை அனுமதிக்கப்படலாம் எனவும் நம்பபடுகின்றது.
பல்கலைக்கழகம் அருகாமையில் உள்ள செனெக்கா கல்லூரியுடன் இணைந்து பிற கல்வி தகைமை தேர்வுரிமைகளையும் வளாகத்தில் வழங்கும்.
புதிய வளாகம் 2021-ல் திறக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.