றெக்ஸ்டேல் பகுதியில் பொலிஸார் தீவிர விசாரணை

றெக்ஸ்டேல் பகுதியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

நேற்று அதிகாலை ஒரு மணியளவில், இஸ்லிங்டன் அவனியூ மற்றும் றெக்ஸ்டேல் பகுதியில் அமைந்துள்ள வங்கி இயந்திரத்தில் பணம் எடுக்கச் சென்ற நபர் ஒருவரை அணுகிய மூவர் அவரிடம் இருந்து பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

இதன்போது குறித்த அந்த நபரிடமிருந்து சுமார் ஆயிரம் டொலர்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும், எனினும் இந்த கொள்ளைச் சம்பவத்தில் குறித்த நபருக்கு காயங்கள் எவையும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளில் ஈடுபட்டுள்ள பொலிஸார், சந்தேக நபர்கள் குறித்த விபரங்கள் எதனையும் உடனடியாக வெளியிடவில்லை. மேலும், இந்த சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News