கனடாவில் 8 முதியவர்களை கொலை செய்த செவிலியருக்கு வந்த நிலை

கனடா நாட்டில் 8 முதியவர்களை கொலை செய்த குற்றத்திற்காக செவிலியப் பெண் ஒருவருக்கு ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் Elizabeth Wettlaufer(49) என்பவர் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், இவர் கடுமையான மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து தனது கண்காணிப்பிற்கு வரும் நோயாளிகளிடம் மோசமாக நடந்து கொண்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் வயது மூத்த நோயாளிகளை ஒன்றன் பின் ஒன்றாக கொலை செய்யவும் முடிவு செய்து அதற்கான பணியில் இறங்கியுள்ளார்.

2007 மற்றும் 2014 ஆகிய காலக்கட்டங்களில் இவரது கண்காணிப்பிற்கு வந்த 8 நோயாளிகள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்.

ஆனால், அப்போது செவிலியர் மீது சந்தேகம் ஏற்படவில்லை. கடந்தாண்டு மருந்தகம் ஒன்றிற்கு சென்ற அப்பெண் தனது முந்திய நடவடிக்கைகளை எடுத்துக் கூறியுள்ளார்.

இவ்விவகாரம் வெளியானதை தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்டார்.

இவ்வழக்கு தொடர்பான விசாரணை நேற்று முன் தினம் நீதிமன்றத்திற்கு வந்தபோது செவிலியர் அனைத்துக் குற்றங்களையும் ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும், கொலையாளி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதால் அவருக்கு 25 ஆண்டுகள் வரை வெளியே வர முடியாத ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News