களுத்துறை, மொரொந்துடுவ பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை ( 19) கைது செய்யப்பட்டுள்ளதாக மொரொந்துடுவ பொலிஸார் தெரிவித்தனர்.
மொரொந்துடுவ பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மொரொந்துடுவ பிரதேசத்தில் வசிக்கும் 41 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபரிடம் இருந்து 1,080 லீற்றர் 500 மில்லி லீற்றர் (06 பீப்பாய்கள்) சட்டவிரோத மதுபானம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரொந்துடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.