ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் (ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி) 51 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை (ஜூலை மாதம் 31 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி வரை) 717 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
இந்நிலையில், தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 365 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 328 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.
இதேவேளை, மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் ஒரு முறைப்பாடும் ஏனைய விடயங்கள் தொடர்பில் 23 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.