பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களுடன் மக்கள் சந்திப்பு நிகழ்வு ஒன்று எதிர்வரும் ஆகஸ்ட் 31ஆம் நாளன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கிளி மக்கள் மற்றும் வட்டக்கச்சி மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் பிரித்தானி கிளை என்பவற்றின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள நிகழ்வு லண்டனில் wembley london UK HA 4PW எனும் இடத்தில் பிரசித்தமான Alperton community schoolஇல் நடைபெறவுள்ளது.
தாயகத்தில் இருந்து லண்டன் வரும் பாராளுமன்ற உறுப்பினரிடம் தாயக நிலவரங்கள், ஜனாதிபதித் தேர்தல், தமிழரசுக் கட்சியின் நிலை, பன்னாட்டுச் சூழலில் தமிழர் உரிமை மற்றும் நீதி போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேசப்படவுளன்ளன.
மாலை 5மணி முதல் 9 மணி வரை இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் பிரித்தானியாவிலுள்ள உறவுகள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்த சந்திப்பு தொடர்பான விபரங்களைப் பெற 07507886621/07588004604 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.