நாடு பலவிதமான வண்ணங்கள் மற்றும் அழுத்தங்களின் அடர்த்தியைக் கொண்டுள்ளதாக இந்தியாவுக்கான ஜெர்மனியின் தூதர் வால்டர் ஜே லிண்ட்னர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் வாழ்ந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட ஜெர்மன் தூதுவர் புதுடெல்லி தனக்கு முழுமையாக வாழ கற்றுக் கொடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
‘இந்தியா நம்பமுடியாத வண்ணங்கள் மற்றும் பன்முகத்தன்மையை கொண்டுள்ளது. ஆனால், உலகில் எந்த ஒரு நாடும் இதுபோன்ற பன்முகத்தன்மை மற்றும் அடர்த்தியான பதிவுகளை கொண்டதாக இல்லை.
இராஜதந்திரம் பற்றிய எனது கருத்து வேறுபட்டது,அது நெறிமுறைகளுக்கு அப்பாற்பட்டது. நான் அந்த நாட்டை அறிய ஒரு நாட்டில் இருக்கிறேன்.
இது எனக்கு ஒரு நாட்டைப் பற்றிய பரந்த கண்ணோட்டத்தை அளிக்கிறது. இராஜதந்திரிகளாகிய நாமும் மாற வேண்டும்’ என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தூதராக தனது மூன்றரை ஆண்டுகால பதவிக்காலம் குறித்து அவர் மேலும் கூறியதாவது: ‘நாட்டிலும் வடக்கிலிருந்து தெற்கிலும், லட்சத்தீவு முதல் கல்கத்தா வரையிலுமாக பெரும்பாலான மாநிலங்களை நான் பார்த்திருக்கிறேன்.
நான் கோவில்கள் மற்றும் மத வழிபாட்டு தலங்களின் கட்டிடங்களுக்கும் சென்றிருக்கிறேன்.
நான் வௌ;வேறு மாநிலங்களில் உணவு சாப்பிட்டேன். இந்த அனுபவங்கள் முக்கியமானவை. என் நாட்டு மக்களையும் இங்கு விஜயம் செய்ய ஊக்குவித்தேன்.
ஆகஸ்ட் 1971 இல் பண்டிட் ரவிசங்கர் மற்றும் பீட்டில்ஸால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘வங்காளதேசத்திற்கான நிகழ்ச்சி திட்டமொன்றின் போது தான் முதன்முதலில் இந்தியா தன்னை ஈர்த்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இவ்வளவு பெரிய நாட்டை நடத்துவதில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமைத்துவ திறமையை லிண்ட்னர் பாராட்டினார்.