‘கிராமத்து நாயகன்’ சசிகுமார் நடிப்பில் தயாராகி வரும் புதிய படத்திற்கு ‘காரி’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதனை ‘முத்திரை இயக்குநர்’ வெற்றிமாறன் தன்னுடைய இணையப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
அறிமுக இயக்குநர் ஹேமந்த் இயக்கத்தில் தயாராகி வரும் முதல் திரைப்படம் ‘காரி’. இதில் நடிகர் சசிகுமார் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை பார்வதி அருண் நடிக்கிறார், இவர்களுடன் நடிகரும், இயக்குநருமான ஜேடி சக்கரவர்த்தி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார்.
கிராமத்து பின்னணியில் கிரைம் திரில்லர் ஜேனரில் தயாராகி வரும் ‘காரி’ படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் எஸ் லக்ஷ்மன் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் படத்திற்கான தலைப்பையும், ஃபர்ஸ்ட்லுக்கையும் படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.
ஃபர்ஸ்ட் லுக்கில் இருளின் பின்னணியில் நடிகர் சசிகுமாரின் முகம் அர்த்தமுள்ளதாக தோன்றுவதால் ரசிகர்களிடமும், இணையவாசிகளிடமும் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]