12 மாவட்டங்களையும் 81 சுகாதார அதிகாரி பிரதேசங்களையும் டெங்கு அபாய வலயங்களாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அடையாளப்படுத்தியுள்ளது.
இதன்படி கொழும்பு, கம்பஹா, களுத்துறை, குருநாகல், புத்தளம், காலி, யாழ்ப்பாணம், கண்டி, இரத்தினபுரி, அம்பாறை, திருகோணமலை மற்றும் மாத்தறை ஆகியவை அதிக ஆபத்துள்ள மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஜனவரி மாதத்தில் மாத்திரம் 7000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாதத்தில் அதிக நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதுடன் கம்பஹா, களுத்துறை, குருநாகல் மாவட்டங்களிலும் அதிகளவான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]