இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன 2022 ஜனவரி 1 ஆம் திகதி முதல் ஒரு வருட காலத்திற்கு தேசிய கிரிக்கெட் அணிக்கான பயிற்றுவிப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜெயவர்த்தனவின் புதிய நியமனத்தின் கீழ், அவர் தேசிய ஆண்கள் அணியைத் தவிர அனைத்து தேசிய அணிகளின் கிரிக்கெட் பிரிவின் பொறுப்பாளராக இருப்பார்.
இலங்கை கிரிக்கெட்டின் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்து, இலங்கை கிரிக்கெட் நிர்வாகக் குழுவால் மஹேல ஜெயவர்தன குறித்த பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]