வாழ்க்கையை அதன் போக்கில் விடுவதை விட, கிடைத்துள்ள வாழ்க்கையை சிறப்பாக திட்டமிட்டு வாழப்பழகுவதே நல்லது. எங்கும், எதற்கும் அஞ்சாமல் எப்போதும் உற்சாகமாக இருக்க கற்று கொள்ள வேண்டும்.
நம்முடைய உடல் ஆரோக்கியத்தின் மையமாக மனம் விளங்குகிறது. மனமும், உடலும் இரண்டற கலந்ததே ஆரோக்கியம். கோபம், விரக்தி, பொறாமை, கவலை ஆகியவை மனிதனின் உடல் நலத்தை பாதிக்கின்றன. இதில் கோபம் என்பது நம்மை நாமே அழித்து கொள்ளும் ஆயுதமாக உள்ளது.
கோபம், ரத்த கொதிப்பை ஏற்படுத்துகிறது. முகத்தை வெளிற செய்து விடுகிறது. எப்போதும் சந்தோசமாய் சிரித்து கொண்டே இருங்கள். தனக்குத்தானே ஆலோசனைகளை வழங்கி, தன்னம்பிக்கையுடன் இருந்தால் எந்த நோயும் தாக்காது.
மோசமான நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் கூட நம்பிக்கையினால் உற்சாகம் பெற்று மரணத்தின் பிடியில் இருந்து மீண்டு இருக்கின்றனர். எங்கும், எதற்கும் அஞ்சாமல் எப்போதும் உற்சாகமாக இருக்க கற்று கொள்ள வேண்டும்.
வாழ்க்கையை அதன் போக்கில் விடுவதை விட, கிடைத்துள்ள வாழ்க்கையை சிறப்பாக திட்டமிட்டு வாழப்பழகுவதே நல்லது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]