பல்வேறு நன்மைகளை கொண்ட சோயா புரதச்சத்து மிகுந்தது. மலச்சிக்கலை போக்குகிறது. புற்றுநோய் வருவதற்கு காரணமான நச்சுக்களை வெளித்தள்ளும் தன்மை கொண்டது.
தேவையான பொருட்கள்
சோயா பீன்ஸ் – 1/2 கப்
துருவிய தேங்காய் – 3 மேஜைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
தாளிக்க
எண்ணெய் – அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – 2 சிட்டிகை
கறிவேப்பிலை – 1 கொத்து
செய்முறை
சோயா பீனை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள், தண்ணீரை வடித்து, மூழ்கும் அளவிற்கு தண்ணீர், தேவையான உப்பு சேர்த்து 3 விசில் வரை, மிதமான தீயில் வேகவைக்கவும்.
கடாயில் எண்ணெய் சேர்த்து, தாளிக்கும் பொருட்களை சேர்த்து தாளித்த பின்னர் வேக வைத்த சோயா பீனை, தண்ணீர் வடித்து சேர்க்கவும்.
ஓரிரு நிமிடங்கள் வதக்கிய பின், தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்.
சத்தான சுவையான சோயா பீன்ஸ் சுண்டல் ரெடி.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]