இலங்கையில் தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாட்டை நீடிப்பது தொடர்பாக இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பயணக் கட்டுப்பாட்டை நீடிப்பது தொடர்பாக இன்று காலை வரையில் எவ்வித அறிவுறுத்தலும் வரவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக ஜனாதிபதியிடமிருந்தோ அல்லது பணிக்குழுவிடமிருந்தோ இதுபோன்ற எந்தவொரு பரிந்துரையும் தங்களுக்கு கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டள்ளார்.
இந்த நிலையில், 14 ஆம் திகதிக்கு இன்னும் ஒரு வாரம் இருப்பதால், தேவை ஏற்படின் பயணக் கட்டுப்பாட்டை நீடிப்பது குறித்து அறிவிக்கப்டுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
http://Facebook page / easy 24 news