தைவான் நாட்டின் வட கிழக்கு கடற்கரை நகரமான ஹுவாலியனில் நேற்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டம்.
ரிக்டர் அளவில் இது 6.1 புள்ளியாக பதிவானது. நிலநடுக்கத்தை தொடர்ந்து நகரின் மையப்பகுதியில் உள்ள பிரமாண்ட ஓட்டல் ஒன்று இடிந்து விழுந்தது.
இதில், 30க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவித்தன.
மேலும் நகரின் உயரமான கட்டிடங்கள் பல சேதமடைந்துள்ளன. நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பு விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை.
கடந்த 3 நாட்களாக 100க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் ஏற்பட்ட நிலையில் நேற்றிரவு நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.