வவுனியா, விநாயகபுரம் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் இளைஞன் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது
நேற்று இரவு இடம்பெற்ற இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது,
மேசன் வேலைக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்த வவுனியா, அரபா நகர் பகுதியை சேர்ந்த சஜா என்கின்ற 28 வயதுடைய இளைஞன் பயணித்த மோட்டர் சைக்கிள் வேகக் கட்டுப்பபாட்டை இழந்து மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் குறித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே பலியானதாக அறியப்படுகிறது.
இச்சம்பவம் குறித்த விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.