திருவையாறு அடுத்த மேலதிருபந்துருத்தியில் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து பொதுமக்கள் மறியல் செய்து வருகின்றனர்.
தஞ்சை சரபோஜி கல்லூரி மாணவர்கள் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து வகுப்புகளை புறக்கணித்து ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர். திருவாரூர், மன்னார்குடியில் பேருந்து கட்டணத்தை தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி இராஐகோபால சுவாமி அரசினர் கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாகை பாரதிதாசன் பல்கலைகழகம், கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் 500க்கும் மேற்பட்ட வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.