இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டிருக்காவிட்டால் தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டிருக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
புதிய அரசியல் சாசனம் உருவாக்குவதன் மூலம் பிரச்சினைக்கு தீர்வு திட்டமொன்றை முன்வைக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்த நாடு எங்களுடையது, சுயாட்சி அதிகாரங்கள் உண்டு, இந்த நாட்டை சேர்ந்தவர்கள் நாம் என்ற உணர்வை ஏற்படுத்த வேண்டுமானால், காத்திரமான அதிகாரப் பகிர்வு அவசியம், என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியா இலங்கை மீது கொண்டுள்ள கரிசனை வெறுமனே பொருளாதார, தந்திரோபாய ரீதியானதல்ல எனவும், அண்டை நாடு என்ற மெய்யான உணர்வின் அடிப்படையிலானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் இலங்கை இந்திய உடன்படிக்கை 30 ஆண்டுகளுக்கு முன்னதாக கைச்சாத்திடப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.