கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிள்ளைகளால் வரையப்பட்ட சித்திர கண்காட்சி “நீதிக்கான நடைபயணம்” எனும் தொனிப்பொருளில் இன்று (26) காலை 10 மணிக்கு இடம்பெற்றது.
கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தில் போரின்போது காணாமல்போன மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள், யுவதிகள் போர்க்காலச் சூழலில் தங்கள் மனதில் பதிந்த விடயங்களை ஓவியங்களாக வரைந்து காட்சிப்படுத்தியுள்ளனர்.