பாடசாலை மாணவர்களுக்கான சீருடைக்காக வழங்கும் வெளச்சரின் பெறுமதியை அதிகரிப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுக்கு பின்னர் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவாவிதாரன குறிப்பிட்டுள்ளார்.
தற்போது 550 ரூபா, 800 ரூபா, 1,000 ரூபா மற்றும் 1,350 ரூபா போன்ற பெறுமதியான வௌச்சர்கள் வழங்கப்படுகின்றன.
இந்தநிலையில், புதிய தீர்மானத்திற்கு அமைய இவற்றின் பெறுமதி அதிகரிக்கப்படும்.
இந்த வருடத்திலிருந்து இந்தத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதுடன், அடுத்த மாதம் மாணவர்களின் சீருடைக்காக வழங்கப்படும் வௌச்சரின் பெறுமதி அதிகரிக்கப்படும் எனவும் திஸ்ஸ ஹேவாவிதாரன மேலும் குறிப்பிட்டுள்ளார்.