இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய இளவரசர் எட்வட் மற்றும் அவரது மனைவி ஷோபி ஆகியோர் 02.02.2018 அன்றைய தினம் நுவரெலியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
விமானத்தில் மூலம் நுவரெலியா நகரசபை மைதானத்தில் காலை 10.40 மணியளவில் வந்திறங்கிய இவர்களை நுவரெலியா மாவட்ட செயலாளர் எம்.பி.ஆர். புஸ்பகுமார தலமையிலான குழுவினர் வரவேற்றனர்.
அதன்பிறகு, நுவரெலியாவில் உள்ள விசேட தேவையுடைய சிறுவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள மென்கெப் பாடசாலைக்கு சென்ற எட்வட் தம்பதியினர் அங்கு கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.