நேற்று மாலை 4 நண்பர்களுடன் களுத்துறை – ஷான்த்த செபஸ்தியன் வீதி கடற் பகுதியில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
களுத்துறை -கடுகுறுந்த பிரதேசத்தினை சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவரே இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாணவரை தேடும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.