இலங்கை அமைச்சரவையின் நிலையியற் கொள்முதல் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், எட்டு மாத காலத்திற்கு 1.8 மில்லியன் பீப்பாய் பெற்றோலை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன்படி, 2022 பெப்ரவரி 15 முதல் அக்டோபர் 10 வரை பெட்ரோல் பீப்பாய்களை இறக்குமதி செய்ய அமைச்சரவையினால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள M/s OQ டிரேடிங் லிமிடெட் நிறுவனத்துடன் இதற்கான உடன்படிக்கை செய்துக்கொள்ளப்படவுள்ளது.
இலங்கையில் டொலர் பற்றாக்குறை காரணமாக எரிபொருள் இறக்குமதி மற்றும் விநியோகத்தில் பாரிய சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கு மத்தியிலேயே அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]