பிரதமர் ரணில், ராஜபக்சவினரை பாதுகாக்க மேற்கொள்ளும் முயற்சியால் நாட்டில் இரத்தக் களரியாகும் வரை பிரச்சினைகள் ஏற்படலாம் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சரத் விஜேசூரிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், நாமலுடன் இறுதியாக நடந்த பேச்சுவார்த்தையில் ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பாட்டின் பின்னரே ரணில் விக்கிரமசிங்க அண்மையில் பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்டார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.