ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
அதிகாரத்திற்கு அடிபணிய மறுத்த பதுளை தமிழ் மகளிர் பாடசாலை அதிபரை மண்டியிட வைத்தமை குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று விசாரணை நடத்தப்படவுள்ளது.
இன்றைய தினம் ஆணைக்குழுவில் முன்னிலையாக முடியாது என முன்னதாக ஊவா மாகாண முதலமைச்சர் விடுத்திருந்த அறிவுறுத்தலை மனித உரிமைகள் ஆணைக்குழு நிராகரித்திருந்தது.
அத்துடன், அவருக்கு பிரிதொரு தினத்தை வழங்க முடியாது என்றும் ஆணைக்குழு குறிப்பிட்டிருந்தது. இதற்கமைய அவர் இன்று ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
நியாயமான காரணங்களின்றி ஆணைக்குழுவின் உத்தரவை புறக்கணிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் முதலமைச்சர் எச்சரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஊவா மாகாண முதலமைச்சருடன், பதுளை பொலிஸ் தலைமையக பரிசோதகர் ஈ.எம்.ரி.பீ.வி.தென்னகோனும் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.