தபால் திணைக்களத்தின் ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் வழங்குகின்ற தீர்வு ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாதது என்று தபால் தொலைத்தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கம் கூறுகிறது.
தபால் திணைக்களத்தை கட்டுப்பாட்டு சபையால் கட்டுப்படுத்தப்படுகின்ற அரச நிறுவனமாக மாற்றுவதற்கு அதுகாரிகள் செயற்பட்டுக் கொண்டிருப்பதாக அந்த சங்கத்தின் பிரதான செயலாளர் எச்.கே. காரியவசம் கூறினார்.
அதிகாரிகளால் மேற்கொள்ளப்படுகின்ற தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு எதிராக எதிர்வரும் நாட்களில் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள நேரிடும் என்று எச்.கே. காரியவசம் கூறினார்.