டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவை சேர்ந்த பி.வி. சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார்.
டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் ஜப்பானை சேர்ந்த அகேன் யமாகுச்சியை எதிர்கொண்ட பி.வி. சிந்து 21-13, 22-20 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.