புதுவை வைத்திக்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குப்புராஜ். இவரது மனைவி முருகம்மாள் (வயது55). குப்புராஜ் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் முருகம்மாள் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கூனிமேட்டை சேர்ந்த முருகம்மாளின் உறவினர் பெர்னேஷ் (34) என்பவர் அவரது வீட்டில் தங்கி புதுவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று காலை முருகம்மாள் டி.வி. நிகழ்ச்சியை பார்க்க சுவீட்சை போட்டார். அப்போது டி.வி. வெடித்து சிதறி வீட்டில் தீப்பிடித்தது. இதில் முருகம்மாளும், பெர்னேசும் தீயில் உடல் கருகினர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து சோலைநகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.