இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதற்கான தனது முடிவை அமெரிக்கா அறிவித்தது. இதை தொடர்ந்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இன்று ஒரு கூட்டத்தை கூட்டி உள்ளது.
ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரிப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். புதன்கிழமையன்று வெள்ளை மாளிகையில் உரையாற்றிய டிரம்ப் அமெரிக்காவின் நீண்ட கால பாரம்பரியத்தை தகர்த்து இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த முடிவு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிரந்திர அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் நீண்ட கால நிலைப்பாட்டில் இருந்து விலகிச்செல்லும் நடவடிக்கையாக கருதமுடியாது என தெரிவித்தார்.
அதே நேரத்தில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதி ஏற்படுத்தவும், நிரந்தர தீர்வுக்கும் வழிகாட்டுவதற்கும் இந்த நடவடிக்கை உதவிகரமாக இருக்கும் என டிரம்ப் தெரிவித்தார்.
டிரம்பின் அறிவிப்பு பல நாடுகளை சீர்குலைத்துள்ளது. பல அமெரிக்க நட்பு நாடுகளூம் கூட்டாளிகளும் டிரம்ப்பின் சர்ச்சைக்குரிய முடிவை விமர்சித்துள்ளனர்.
பிரிட்டன் பிரதமர் தெரசா மே, டொனால்டு டிரம்ப்பின் முடிவை ஆதரிக்கவில்லை. அவர் கூறுகையில், ”பிராந்தியத்தில் சமாதானத்திற்கான வாய்ப்பினைப் பொறுத்த வரையில் இது உதவாது என நாங்கள் நம்புகிறோம். இஸ்ரேலுக்கு பிரிட்டிஷ் துாதரகம் டெல் அவிவ் அடிப்படையிலானது மற்றும் அதை இடம் மாற்றுவதற்கான எந்த திட்டமும் இல்லை. சம்பந்தப்பட்ட பாதுகாப்பு சபை தீர்மானங்களுக்கு இணங்க, கிழக்கு ஜெருசலேம் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய பிரதேசங்களின் பகுதியாக நாம் கருதுகிறோம், என கூறி உள்ளார்.
இந்த நிலையில் ஐநாசபையின் பாதுகாப்பு சபை இன்று கூட உள்ளது. இதில் இஸ்ரேல் தொடர்பாக விவாதம் நடக்கும்.
ஐ.நா. பொது செயலாளர் அண்டோனியோ கெட்டரேஸ் கூறுகையில், ”ஜெருசலேம் இறுதி நிலைப்பாடு குறித்து நேரடி பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கப்பட வேண்டும்,” என்றும் கூறி இருந்தார்.