சமூக ஊடகங்களை முடக்கும் முடிவை அதிகாரிகள் மீள்பரிசீலனை செய்யவேண்டும் என அமைச்சர் நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
சமூக ஊடங்களை முடக்குவதை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டேன்-விபிஎன் கிடைப்பது – தற்போது நான் பயன்படுத்துவதுபோல-அவ்வாறான தடைகளை முற்றாக அர்த்தமற்றதாக்கிவிடுகின்றது.
அதிகாரிகள் மேலும் முற்போக்கான விதத்தில் சிந்திக்கவேண்டும்,சமூக ஊடகங்களை முடக்கும் முடிவை மீள்பரிசீலனை செய்யவேண்டும் என நான் வலியுறுத்துகி;ன்றேன்