கென்சவேர்ட்டிவ் கட்சியின் தலைமைத்துவத்திற்கான போட்டியிலிருந்து விலகுவதாக முன்னாள் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.
கட்சியின் தலைமைபதவிக்கு போட்டியிடுவதற்கான ஆதரவு எனக்குள்ளது ஆனால் தலைமைக்காக போட்டியிடுவது சரியான விடயமல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
நான் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக காணப்பட்டன ஆனால் நாடாளுமன்றத்தில் ஐக்கியப்பட்ட கட்சியொன்று அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.
45 நாட்கள் பிரதமராக பதவி வகித்த பின்னர் லிஸ் டிரஸ் பதவி விலகியதை தொடர்ந்து கட்சியின் தலைமைக்கான போட்டி வியாழக்கிழமை ஆரம்பமாகியிருந்தது.
மூன்று வருடங்களிற்கு முன்னர் கட்சியை பொதுத்தேர்தலில் வெற்றிகரமாக வழிநடத்தினேன் இதன் காரணமாக பொதுத்தேர்தலை தவிர்க்ககூடிய திறன் என்னிடம் உள்ளது என கருதியதால் தான் நான் கட்சியின் தலைமை பதவிக்கு போட்டியிட தீர்மானித்தேன் மக்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தவேண்டிய தருணத்தில் பொதுதேர்தல் என்பது அதிலிருந்து கவனத்தை திருப்பும் விடயமாக அமைந்துவிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.