கெக்கிராவ திப்பட்டுவௌ பிரதேசத்தில் கடந்த ஒக்டோபர் மாதம் நடைபெற்ற தேசிய ஏர் பூட்டு விழாவில் கெக்கிராவை மத்திய மகா வித்தியாலயத்தில் தரம் 09 இல் கல்வி கற்கும் ஆர்.எம்.தெவ்மினி இந்ரநாத மாணவியினால் ஆக்கப்பட்ட கவிதை நூல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது.
குறித்த மாணவியை நேற்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்திற்கு அழைத்த ஜனாதிபதி , அம்மாணவியின் எதிர்கால கல்வி நடவடிக்கைக்காக பணப் பரிசிலை வழங்கிவைத்தார்