கிளிநொச்சி – சாந்தபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு சம்பவத்தில் 6 பேர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த வாள்வெட்டுச் சம்பவம் நேற்றைய தினம் இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
அக்கராயன் பகுதியைச் சேர்ந்தவர்களே வாள்வெட்டு சம்பவத்தை மேற்கொண்டதாக பிரதேச மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இதன்போது பாதிக்கப்பட்ட 7 ஆண்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் எவ்வித விசாரணைகளையும் முன்னெடுக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.