கரூர் அருகே உள்ள ரெங்கநாதன் பேட்டையை சேர்ந்தவர் தீனதயாளன் (வயது 30). சேலம் ஆத்தூரை சேர்ந்தவர் புவனேசுவரி (25). இவர்கள் இருவரும் காதலித்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். தீனதயாளன் கரூர் பதிவாளர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று கணவன், மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. இதனால் மன வேதனையடைந்த புவனேசுவரி வீட்டின் ஒரு அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து புவனேசுவரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்தி வருகிறார்.